
Tuesday, August 24, 2010
காயத்ரி ஜபம் : "ராமோ விக்ரஹவான் தர்ம:" - பகுதி -2

Thursday, August 5, 2010
க்ஷராக்ஷராத்மிகா, க்ஷோபிணீ , ஸூக்ஷ்மரூபிணீ

Tuesday, August 3, 2010
க்ஷயவ்ருத்தி வினிர்முக்தா, க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா

Friday, July 30, 2010
சிரஸ்த்திதா, ஹ்ருதயஸ்த்தா, ரவிப்ரக்யா

Tuesday, July 27, 2010
பஞ்சப்ரம்ஹஸ்வரூபிணீ , ஸுதா தாராபி வர்ஷிணீ

Friday, July 23, 2010
ஸுமேரு மத்ய ச்ருங்கஸ்த்தா, ஸ்ரீமன் நகர நாயிகா

அம்பிகை வசிக்கும் நகரத்தின் பெயரே ஸ்ரீமன் நகரம், இதைச் சொல்லும்போது 'ஸ்ரீமன் நகர நாயிகா' என்கிறார்கள் வாக் தேவதைகள், அதாவது லக்ஷ்மீகரமான நகரத்தின் நாயகி என்று பொருள் சொல்லலாம். ஸ்ரீவித்யா நகரம் என்பதையே இப்படிச் சொல்லுவதாகச் சொல்கிறார்கள் பெரியோர். இந்த நகரமானது இரண்டு இடங்களில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 1. லலிதா ஸ்தா ரத்னில் சொன்னது போல, ஸுமேரு மலையில்; 2. எல்லா பிரம்மாண்டங்களுக்கும் வெளியில், ஸுதா சமுத்ரத்தின் மத்தியில் இருக்கும் மணித்விபத்தில் இருப்பதாக ருத்ரயாமளம் எனும் நூலில் சொல்லபடுகிறது. ஸ்ரீமன் நகரம் என்பதே ஸ்ரீசக்ரந்தான் என்பது தீக்ஷதரது உரையில் சொல்லப்பட்டிருக்கீறது.
சிந்தாமணி க்ருஹத்தில் இருக்கும், பெரிய தாமரைப் புஷ்பங்கள் நிறைந்த காட்டில் அம்பிகை இருக்கிறாள் என்கிறார்கள் "மஹா பத்மாடவீ ஸம்ஸ்த்தா" என்னும் அடுத்த நாமத்தில். க்ருஹத்தில் ஏது குளம், தாமரைக் காடு?. சாதகம் செய்பவர்களது ஸஹஸ்ராரம் என்னும் இடமான புருவ மத்தியில் இருக்கிறாள் என்பதே பொருள். சாதனையாளர்களது சஹஸ்ராரத்தில் என்பதையே தாமரைகள் நிறைந்த காடு என்கிறார்கள். ருத்ரயாமளத்தில் இந்த பத்மாடவீ யானது, ஸுதா சமுத்ரத்தில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறது.இதனை அடுத்த நாமத்தின் மூலம் இன்னும் தெளிவாக அறியலாம்.
Tuesday, July 20, 2010
பக்த ஸெளபாக்ய தாயினீ , பக்திப்ரியா, பக்திகம்யா, பக்திவச்யா

Monday, July 12, 2010
ஸுகாராத்யா,சிவாராத்யா, சுபகரி, சிவதூதீ, சிவமூர்த்தி

Thursday, July 8, 2010
நடேச்வரீ, நந்திவித்யா, முக்திரூபிணீ

Monday, July 5, 2010
சிந்தனை செய் மனமே....ச்ரத்தை
Saturday, July 3, 2010
மஹநீயா, தயா மூர்த்தி, ஆத்ம வித்யா. மஹா வித்யா

Monday, June 21, 2010
ஸத் சங்கம்....
Friday, June 11, 2010
மஹா காளீ, மஹா யோகேஸ்வரேஸ்வரீ

Wednesday, June 9, 2010
பரமாணவே, பராத்பரா, பாசஹஸ்தா, பாசஹந்த்ரீ


அம்பிகையை நிலவுடன் ஒப்பிடும் நாமங்கள் சிலவற்றை முன்னரே பார்த்தோம், இப்போது அவளே ஜ்யோதி ஸ்வரூபம் என்னும் நாமம்.ச்ருதியில் ப்ரம்ஹமே ஸுர்யன் முதலானவர்களுக்கு ப்ரகாசத்தை அருளுவதாகச் சொல்லியிருக்கிறது. அப்படிப்பட்ட ஜ்யோதி ஸ்வரூபமான பரம்பொருளே அம்பிகை என்பதை "பரம்ஜ்யோதி" என்று கூறுகிறார்கள். "தாம" என்றால் தேஜஸ், நிலை, இருப்பிடம் ஆகிய அர்த்தங்கள் உண்டு. நிறைந்த விசேஷமான நிலையில் இருப்பவள் என்றோ, அல்லது நிறைந்த தேஜஸுடன் இருப்பவளென்றும் சொல்லும்படியான நாமமே "பரம்தாம" என்பது. அம்பிகை ஸர்வ்வோத்தம பதமாக இருப்பவள் என்றும் சொல்லலாம். ப்ரயோகத்தில்/நாமாவளியாகச் சொல்லுகையில், பரஸ்மை ஜ்யோதிஷே நம: என்றும் பரஸ்மை தாம்னே நம: என்றும் கூறவேண்டும்.
இப்படி ஜ்யோதிஸ்வரூபமாகவும், நிறைந்த தேஜஸுடனும் இருப்பவளை அணுவாகவும் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் வாக்தேவதைகள். மிக ஸூக்ஷ்மமான பொருளான அணுவாகச் சொல்லியிருப்பதே "பரமாணு:" என்பது. அதாவது அறிவதற்கு முடியாத ரூபத்தை உடையவளாம். இன்றைய விஞ்ஞானமும் அணுவை ஏதேதோ கருவிகளைக் கொண்டே உணர்கிறார்களே தவிர சாதாரணக் கண்களால் காண இயலவில்லையே?...உணர்வால் அறியப்படுபவள் என்பதான பொருள் சரிதான். இப்படி அணுவாக இருப்பவளே பரம ஸ்ரேஷ்டமாகவும் இருக்கிறாள். திரிமூர்த்திகளைவிட ஸ்ரேஷ்டமானவர் என்பதாக "பராத்பரா" என்பதற்குப் பொருள் சொல்லுகிறார் பாஸ்கரர்.இதையே இன்னொருவிதத்திலும் சொல்லலாம். ப்ரம்ஹாவின் ஆயுளைக் குறிக்கும் சொல் பரம் என்பது. அவ்வாறான பரம் என்பதையும் விஞ்சிய, அதற்கு மேற்பட்டவள் அம்பிகை என்றும் கூறலாம்.
அம்பாள் தனது ஒரு கையில் ராகஸ்வரூபமான பாசத்தை இடது கையில் வைத்திருப்பதால் அவள் "பாசஹஸ்தா", இதையே பாசத்தை தன்கையால் விலக்குபவள் என்றும் கூறலாம். இவ்வாறு பாசத்தை, அவித்யைகளைப் போக்குபவள் என்பதே "பாசஹந்த்ரீ". அனிருத்தன் பாணாசுரனது நாக பாணத்தால் கட்டுண்டு இருந்த சமயத்தில் அம்பாளுடைய அனுக்ரஹத்தால் அவன் விடுவிக்கப்படுகிறான், இதை இந்த நாமவுக்குப் பொருளாகச் சொல்லியிருக்கிறார் கணேசய்யர். இவள் தனது பக்தர்களின் எதிரிகளது மந்திரங்களை சிறப்பாக விலக்குகிறாளாம், ஆகவே அவளை "பரம் மந்த்ர விபேதினீ" என்று சொல்கிறார்கள் தேவதைகள். பிறரால் ஆபிசாரம் போன்ற தவறான விஷயங்களுக்கு ப்ரயோகம் செய்யும் மந்த்ரங்களை நாசம் செய்து, அவை தனது பக்தர்களை தாக்காது காப்பவள் என்றும் கூறலாம். பரமான (சிறப்பான) மந்த்ரமாகிய பஞ்சதசி என்னும் தனது மந்திரத்தை தனது உபாசகர்களுக்கு பலவிதமாகச் சொல்லுபவள் என்றும் சொல்லலாம்.
Sunday, May 30, 2010
மஹா பெரியவரும், எனது மாதாமஹரும்....

Wednesday, May 19, 2010
சங்கர ஜெயந்தி சிறப்புப் பதிவு 3 : சங்கரரும் சாரதையும்

Tuesday, May 18, 2010
சங்கர ஜெயந்தி சிறப்புப் பதிவு 2 : சங்கரருக்கு பராசக்தி தரிசனம்

ஒருநாள் சிவகுரு அவர்களால் பூஜை செய்ய இயலாத நிலை, ஆகையால் தாய் ஆர்யாம்பாள் குழந்தை சங்கரரரிடம் பாலைக் கொடுத்து அனுப்பி அம்பிகைக்கு நிவேதனம் செய்யச் சொல்லுகிறார். சங்கரரும் கோவிலை அடைந்து அம்பிகையின்முன் பாலை வைத்துவிட்டு அம்பிகையை நோக்கி 'என் தந்தைக்கு பதிலாக நான் வந்திருக்கிறேன், எப்போதும் போல இன்றும் நீ பாலை கொஞ்சம் அருந்தி, மீதத்தை எனக்குத் தா" என்று பிரார்த்தனை செய்கிறார். குழந்தை சங்கரரின் பரிசுத்தமான பிரார்த்தனைக் கேட்ட அம்பிகை, அவர் கொண்டுவந்த பாலை எடுத்து அருந்துகிறாள். அப்போது தன் முன்னால் இருக்கும் குழந்தையின் சிறப்பினை நினைத்தவாறு முழுவதையும் அருந்திவிடுகிறாள்.
தனக்கு மீதம் ஏதும் வைக்காது பால் முழுவதையும் அருந்தியதைக் கண்ட பாலகர் வருத்தமுற்று அழ ஆரம்பித்துவிடுகிறார். அப்போதுதான் அம்பிகைக்கு தனது செயல் புரியவருகிறது. கருணா ரூபமான அவள் தனது செல்லக் குழந்தை, ஈச்வரனதுஅம்சமான அக்குழந்தையின் அழுகையை சகியாது, குழந்தை சங்கரரை தனது மடியிலிருத்தி, தனது ஸ்தனத்திலிருந்து பாலைத் தருகிறாள். பின்னர் குழந்தையை கொஞ்சி, இல்லத்திற்கு அனுப்புகிறாள். இல்லம் திரும்பிய பாலகர் தனது தாயிடம் நடந்த சம்பவத்தைக் கூறினார் என்பது மாதவீய சங்கர விஜயத்தில் கூறப்பட்டிருப்பது.
அந்தப் பாடல்,
தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:


ஆக சங்கரருக்கு முதலில் அனுக்ரஹம் செய்தது பராசக்தியே என்று தெரிகிறது. பிற்காலத்திலேயே மற்ற ரூபங்களின் தரிசனம் கிட்டியிருக்கிறது.
Monday, May 17, 2010
சங்கர ஜெயந்தி சிறப்புப் பதிவு -1 : ஆதிசங்கர பகவத்பாதர் வைஷ்ணவரா?, சைவரா?,சாக்தரா?...

Monday, May 10, 2010
மந்த்ரிண்யம்பா விரசித விஷங்க வத தோஷிதா
