நிர்மல பாஸித சோபித லிங்கம்
ஜன்மஜ து:க்க விநாசக லிங்கம்
நாகேந்ர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை-ந-காராய நம: சிவாய
சிறந்த சர்பங்களை மாலையாக அணிந்தவரும், மூன்று கண்களை உடையவரும், உடல் முழுவதும் விபூதி பூசியவரும், மஹேஸ்வரரும், அழிவற்றவரும், தூய்மையானவரும், திசைகளை ஆடையாகக் கொண்டவரும் பஞ்சாக்ஷரத்தில் உள்ள முதல் எழுத்தான ந-கார வடிவானவரும், மங்களம் அருளுபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
மந்தாகினீ ஸலிலசந்தன சர்சிதாய நந்தீஸ்வர ப்ரமதநாத மஹேஸ்வராய
மந்தாரபுஷ்ப பஹுபுஷ்ப ஸுபுஜிதாய தஸ்மை-ம-காராய நம: சிவாய
கங்கா ஜலத்தால் குழைக்கப்பட்ட சந்தனத்தை உடலில் பூசியவரும் நந்திகேஸ்வரர் முதலான பூதகணங்களுக்குத் தலைவரும், மஹேஸ்வரரும், மந்தார புஷ்பம் போன்ற பலவிதனமா புஷ்பங்களால் நன்கு பூஜிக்கப்பட்டவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் இரண்டாவது எழுத்தான ம-கார வடிவானவரும், மங்களம் அருளுபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.

சிவாய கெளரிவதனாய அப்ஜப்ருந்த ஸூர்யாய தக்ஷாத்வர நாஸகாய
ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை-சி-காராய நம: சிவாய
வஸிஷ்ட கும்போத்பவ கொளதமார்ய முநீந்த்ர தேவார்ச்சித சேகராய
சந்த்ரார்க்க வைஸ்வாநர லோசனாய தஸ்மை-வ-காராய நம:சிவாய
வஸிஷ்டர், அகஸ்தியர், கெளதமர் முதலிய சிறந்த முனிவர்களாலும், அனைத்து தேவர்களாம் பூஜிக்கப்பட்ட சிரஸ்ஸை உடையவரும், சந்திரன், ஸுர்யன், அக்னி ஆகியவர்களை மூன்று கண்களாக உடையவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் நான்காவது எழுத்தான வ-கார வடிவானவரும் மங்களத்தை தருபவருமான சிவனுக்கு நமஸ்கராம்.
யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய பிநாக ஹஸ்தாய ஸநாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய தஸ்மை-ய-காராய நம: சிவாய
யக்ஷனான குபேர வடிவத்தில் இருப்பவரும், ஜடைகளைத் தாங்கிக் கொண்டிருப்பவரும், பிநாகம் என்னும் வில்லை கையில் வைத்திருப்பவரும், மிக பழமையானவரும், திவ்ய மங்கள வடிவானவரும், தேவருக்கெல்லாம் தேவரும், திசைகளையே ஆடையாகக் கொண்டவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் ஐந்தாவது எழுத்தான ய-கார வடிவானவரும், மங்களத்தைத் தருபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
பஞ்சாக்ஷர மிதம் புண்யம் ய:படேத் சிவஸன்னிதெள
சிவலோக மவாப்னோதி சிவேன ஸஹ மோததே
இந்த புண்யமான பஞ்சாக்ஷர ஸ்தோத்ரத்தை சிவ ஸன்னிதியில் படிப்பவர்கள், இவ்வுலகில் ஸகல போகங்களையும் அனுபவித்து, பிறகு கைலாஸத்தை அடைந்து ஸ்ரீபரமேஸ்வரருடன் ஆனந்தத்தை அனுபவிப்பார்கள்.
சகலருக்கும் சாம்ப பரமேஸ்வரன் நலம் அருளப் பிரார்த்திப்போம்.