Thursday, March 5, 2009

ஸ்ரீ பாஸ்கர ராயர்....பகுதி-1

ஆதிசங்கரர் பல முறை லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண நினைத்து தமது சிஷ்யரிடம் சஹஸ்ர நாமச் சுவடிகளை எடுத்துவரப் பணித்த போதும், சிஷ்யர் விஷ்ணு சஹஸ்ரநாம சுவடிகளையே தந்தாராம். 2-3 முறை இவ்வாறு நடக்க, ஏன் இப்படி என்று சிஷ்யரிடம் கேட்கையில், சிஷ்யர் தாம் சுவடிகளை எடுக்கையில் ஒரு சிறு பெண் வந்து சுவடிகளை தந்ததாகவும், அதனைச் சரிபார்க்காது தாம் கொண்டுவந்து தந்ததாகக் கூறுகிறார். இவ்வாறு 2-3 முறை விஷ்ணு சஹஸ்ர நாமச் சுவடிகளை அன்னையே தந்ததாக அறிந்த சங்கரரும், அது அன்னையின் ஆணை என்று உணர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் மட்டும் செய்தாராம். செளந்தர்ய லஹரி, பவானி ஸ்தோத்ரம், என்று பலவிதங்களில் அன்னை பராசக்தி மீது ஸ்லோகங்களை அருளிய ஆதிசங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண இயலவில்லை. அதையே பிற்காலத்தில் வந்த ஒருவர் மூலமாக அன்னை செய்து வைத்தாள் என்றால் அது பிற்காலத்தில் வந்தவரது பக்தியை, அனுஷ்ட்டான சாதகத்தை, பாண்டித்யத்தை அன்னையே விரும்பிச் செயல்படுத்தினாள் என்றுதானே பொருள்?. இவ்வாறு லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணியவர்தான் பாஸ்கர ராயர். தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்கத்தில் பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.

இவர் பிறந்தது மாகாராஷ்டிரத்தில், பாகா என்னும் நகரத்தில். இவரது பிறப்பு கி.பி 1690 என்று தெரிகிறது. தந்தை பெயர் கம்பீர ராயர், தாயார் கோனாம்பா. கம்பீர ராயர் விஜயநகர அரசவையில் பெளராணிகராக இருந்தவர், மகாபாரதப் பிரவசனம் செய்து அதன் மூலமாக பாரதீ என்னும் பட்டப் பெயரை பரம்பரை உரிமையுடன் பெற்றதாகச் சொல்கிறார்கள்.

கம்பீர ராயர் தமது மகனான பாஸ்கர ராயருக்கு காசியில் உபநயனமும், அத்யயனமும் செய்து வைத்திருக்கிறார். அக்காலத்திலேயே வாக்தேவி மந்திர தீக்ஷையும் நடந்து அம்மந்திரத்தை ஜபித்து வந்திருக்கிறார். சிறிது காலத்திலேயே வேத அத்யயனம் முடித்து ஊர் திரும்புகையில் குஜராத்தில் ப்ரகாசாநந்த நாதர் என்பவரை கண்டு அவரிடம் ஸ்ரீ வித்யை உபதேசமும், பூர்ணாபிஷேகமும் செய்து கொள்கிறார். பூர்ணாபிஷேக நாமம் ஸ்ரீ சிதானந்த பாதரேணு என்பதாகும். பின்னர் ஸ்ரீ கங்காதர வாஜபேயி என்பவரிடம் தர்க்க சாஸ்த்திரத்தையும் படிக்கிறார். அதர்வண வேதம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக தானே அதனை அத்யயனம் செய்து அதனை பலருக்கும் கற்பித்து அவ்வேதத்தை உத்தாரணம் செய்கிறார்

இவரது மனைவி பெயர் ஆனந்தி என்பதாகும். அவருக்கும் மந்திர உபதேசம் செய்வித்து பத்மாவதம்மாள் என்று தீக்ஷா நாமம் வழங்கியிருக்கிறார். பிறகு ஒரு சமயம் வல்லப ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த ஒரு வித்வானை வாதில் வென்று அவரது மகளையும் திருமணம் செய்து கொள்கிறார். அந்த மனைவி பெயர் பார்வதி என்பதாம். இரு மனைவிகளுடன் காசியாத்திரை கிளம்பிச் செல்லும் வழியில் ஒர் மாத்வ மஹானையும் வாதில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. காசியில் ஸோம யாகம் செய்திருக்கிறார். அக்காலத்தில் காசியில் இருக்கும் வைதீகர்கள் உபாசனா மார்க்கத்தை ஏளனம் செய்வதும், குறை கூறுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. பாஸ்கர ராயர் சமயாசாரத்தின் படியாக உபாசனை செய்து வந்தாலும், அவரை வாமாசாரத்தைச் சார்ந்தவர் என்று திரித்துக் கூறி இகழ்ந்து வந்திருக்கின்றனர். இதனை அறிந்த பாஸ்கர ராயர், தாம் வாதம் செய்ய தயார் என்று பிரகடனம் செய்கிறார்.

பாஸ்கர ராயருடன் வாதம் செய்ய அப்போது அங்கிருந்த குங்குமாநந்த நாதர் என்னும் யோகியைத் தயார் செய்து, அவரை முதன்மையாகக் கொண்டு வாதத்தை தொடங்குகின்றனர் வைதீகர்கள். பல கேள்விகளுக்கும் சிறப்பாக, சுலபமாக பதிலளிக்கிறார் பாஸ்கரர். அவரது வாதத் திறமையையும், மந்திர சாஸ்திரத்தில் இருக்கும் திறமையும் எல்லோரும் வியக்கின்றனர். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தில் இருக்கும் "சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா" (237ஆம் நாமம்) என்பதில் வரும் 64 கோடி யோகினீகள் யார் என்று கேட்கின்றனர். பாஸ்கரரும் அம்பிகையை தியானித்துப் பின்னர், வரிசையாகச் சொல்ல ஆரம்பித்து, அந்தந்த யோகினிகளுக்கான பெயர், மந்திரங்கள், சரித்திரங்களை வரிசையாகச் சொல்லச் சொல்ல பிரமித்துப் போய்விடுகின்றனர். அப்போது தமது தலைவரான குங்குமாநந்த நாதரிடம் எப்படி இது சாத்தியம் என்று வினவ, அவரும் பாஸ்கர ராயர் சாதாரணமானவர் அல்லர். நமது கேள்விகளுக்கு அன்னை பராசக்தியே கிளி உருவில் அவர் தோளில் அமர்ந்து, அவர் சார்பில் பதிலளிக்கிறாள் என்று கூறுகிறார். தமது சிஷ்யர்கள் அந்தக் காக்ஷியைக் காணத்தக்க விசேஷ பார்வையையும் அளிக்கிறார். வைதீகர்களும் அன்னையைக் கிளி ரூபமாக தரிசித்து, பாஸ்கர ராயரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் நில்லாது பாஸ்கர ராயரை குருவாக ஏற்று அவரிடம் மந்திரோபதேசமும் பெற்றதாகச் சொல்லப்பட்டுகிறது.

19 comments:

Geetha Sambasivam said...

//தமது சிஷ்யர்கள் அந்தக் காக்ஷியைக் காணத்தக்க விசேஷ பார்வையையும் அளிக்கிறார்.//

இது தான் ஞானக் கண் எனச் சொல்றதுனு நம்பறேன். நிறைய எழுதி இருக்கீங்க போல, மெதுவாத் தான் படிக்கணும். :(

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா...

நிறைய எழுதல்லாம் இல்லையம்மா...இது ஆ.ஹ்ருதயத்திற்காக நினைத்திருந்த பதிவு....இங்கு வந்திருக்கு அவ்வளவுதான். :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

அக்காலத்தில் காசியில் இருக்கும் வைதீகர்கள் உபாசனா மார்க்கத்தை ஏளனம் செய்வதும், குறை கூறுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது.

ஓ நம்ப கோஷ்டியை சேர்ந்தவங்க அந்த காலத்திலேயெ இருந்தார்கள் போல
பாஸ்கர ராயரின் லலிதாஸ்கஸ்ரநாம பாஷ்யம் இப்போதும் கிடைக்கிறதா மௌலி சார்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாஸ்கர ராயர் பற்றிய விவரணத்துக்கு நன்றி-ண்ணா!

//பராசக்தியே கிளி உருவில் அவர் தோளில் அமர்ந்து, அவர் சார்பில் பதிலளிக்கிறாள் என்று கூறுகிறார்//

அருமை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//2-3 முறை இவ்வாறு நடக்க, ஏன் இப்படி என்று சிஷ்யரிடம் கேட்கையில், சிஷ்யர் தாம் சுவடிகளை எடுக்கையில் ஒரு சிறு பெண் வந்து சுவடிகளை தந்ததாகவும், அதனைச் சரிபார்க்காது தாம் கொண்டுவந்து தந்ததாகக் கூறுகிறார்//

2-3 முறையில், முதல் முறை ஓக்கே! அடுத்த முறை கூடவா சரி பார்க்க மாட்டார்?
இதன் பின்னர் இன்னும் நுட்பமான விளக்கம் இருக்கும்-ன்னு நினைக்கிறேன்! கொஞ்சம் நுணுக்கிப் பார்த்துச் சொல்லுங்கண்ணா!

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திராச சார்.

//பாஸ்கர ராயரின் லலிதாஸ்கஸ்ரநாம பாஷ்யம் இப்போதும் கிடைக்கிறதா மௌலி சார்//

இன்று வரும் பாஷ்யங்கள், ராமகிருஷ்ண மடத்துப் பதிப்பு உட்பட எல்லாம் இந்த பாஷ்யத்தை அடிப்படையாகக் கொண்டது தான்.
முன்னுரையில் குறிப்பிட்டு இருப்பார்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...
This comment has been removed by a blog administrator.
குமரன் (Kumaran) said...

ஆசாரிய ஹிருதயத்திற்கான இந்த இடுகைக்கு லேபிலில் 'ஆசார்ய ஹ்ருதயம்'ன்னு போட்டுருங்க மௌலி. :-)

Kavinaya said...

//அதையே பிற்காலத்தில் வந்த ஒருவர் மூலமாக அன்னை செய்து வைத்தாள் என்றால் அது பிற்காலத்தில் வந்தவரது பக்தியை, அனுஷ்ட்டான சாதகத்தை, பாண்டித்யத்தை அன்னையே விரும்பிச் செயல்படுத்தினாள் என்றுதானே பொருள்?.//

ஆஹா.

சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க மௌலி. (நான் மெதுவா படிச்சா மட்டும் கோச்சுக்காதீங்க :)

கபீரன்பன் said...

நல்ல தகவல்கள் மௌளி. நன்றி.

//தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்கத்தில் பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது //

மராட்டியர்கள் தஞ்சையை ஆண்டபோது தமிழ்நாட்டுக்கே குடி பெயர்ந்தனரோ?
அடுத்த பகுதியில் பதில் வரும் என்று நம்புகிறேன். :)

ambi said...

ம்ம், தம்பி சொல்லி படிக்க வந்தேன். (எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்? எல்லாப் புகழும் இறைவனுக்கே!) :))

ambi said...

//ஆ.ஹ்ருதயத்திற்காக நினைத்திருந்த பதிவு....இங்கு வந்திருக்கு அவ்வளவுதான்//

ரொம்ப சிம்பிளா சொல்லிட்டீங்களே அண்ணா. :))

ambi said...

//அக்காலத்தில் காசியில் இருக்கும் வைதீகர்கள் உபாசனா மார்க்கத்தை ஏளனம் செய்வதும், குறை கூறுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது.
//

ம்ம், சில நேரங்களில் சில மனிதர்கள். :))

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்.

நீங்க சொன்ன மாதிரிச் செய்யலாம் தான், ஆனால் இப்போது நான் அக்குழுவில் இல்லை, ஆகவே அதனை இங்கு உபயோகிப்பது சரி என்று தோன்றவில்லை. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா...

//சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க //

இன்றிரவு அல்லது நாளை காலை இந்திய நேரப்படி போட்டுடலாம் :-)

//(நான் மெதுவா படிச்சா மட்டும் கோச்சுக்காதீங்க :)//

நான் எதற்கு கோவிக்கப்போறேன். எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது படியுங்கள். :-)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க அம்பி...

//(எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்? எல்லாப் புகழும் இறைவனுக்கே!) :))//

ஒரு முறை ஹரிநாம சங்கீர்த்தனம் செய்யுமிடத்துக்குச் சென்றதன் விளைவு ஐயா இது :-)

//ம்ம், சில நேரங்களில் சில மனிதர்கள். :))//

ஆம்!....இதனை இதற்கு மேல் மூதறிக்க வேண்டாம் தான்

//ரொம்ப சிம்பிளா சொல்லிட்டீங்களே அண்ணா. :))//

ஏன்?, இதில் என்ன ஸ்பெஷலாச் சொல்ல இருக்குன்னு தெரியல்ல...

Arunmozhi said...

நிறைய நிறைவான தகவல்கள் நன்றி சார்

nagarajan said...

nomba nandri ayya