
Tuesday, May 26, 2009
மஹா ரூபா, மஹா மாயா, மஹா சக்தி..

Thursday, May 7, 2009
நரஸிம்ஹ ஜெயந்தி - சிறப்புப் பதிவு-2
ஸம்ஸார-ஸாகர விஸால கரால கால
நக்ரக்ரஹ-க்-ரஸந நிக்ரஹ விக்ரஹஸ்ய
வ்யக்ரஸ்ய ராக நிசயோர்மி-நிபீடிதஸ்ய
ஸம்ஸார ஸாகர நிமஜ்ஜந முஹ்யமானம்
தீநம் விலோகய விபோ! கருணாநிதே! மாம்
ப்ரஹ்லாத கேத பரிஹார க்ருதாவதார!
மிக்க வலிமை உள்ளவரே!, கருணையுள்ளவரே!, பிரஹலாதனின் கஷ்டத்தைப் போக்க அவதரித்தவரே!, வாழ்க்கை என்னும் கடலில் மூழ்கி மயக்கமுறும் என்னை தங்கள் கடைக்கண் பார்வையால் அருள வேண்டும். லக்ஷ்மி நரஸிம்ஹரே!, எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

ஸம்ஸார-கோர கஹநே சரதோ முராரே!
மரோக்ர-பீகர-ம்ருக ப்ரவரார்தி தஸ்ய
ஆர்த்தஸ்ய மத்ஸர நிதாக-நிபீடிதஸ்ய
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

பத்வாக லே யமபடா பஹு தர்ஜயந்த:
கர்ஷ்ந்தி யத்ர பவ பாச சதையுதம் மாம்
ஏகாகிநம் பர வஸம் சகிதம் தயாளோ!
இரக்கமுடையவனே!, வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான பாசங்களால் சூழப்பட்ட என்னை யமனின் சேவகர்கள் கழுத்தில் பாசக்கயிற்றைக் கட்டி மிகவும் அதட்டி எங்கோ இழுத்துச் செல்கிறார்கள். நான் தனியாக, அவர்களது வயப்பட்டவனாக இருக்கிறேன். ல்க்ஷ்மி நரஸிம்ஹா, நீயே எனக்கு கை தந்தருள வேண்டும்.

லக்ஷ்மிபதே! கமலநாப! ஸுரேச! விஷ்ணோ!
வைகுண்ட! க்ருஷ்ண! மதுஸுதன!புஷ்கராக்ஷ!
ப்ரஹ்மண்ய! கேசவ! ஜனார்தந! வாஸுதேவ!
லக்ஷ்மியின் நாயகனே!, தொப்புளில் தாமரையைக் கொண்டவனே!, தேவர்களின் தலைவனே!, எங்கும் வியாபித்திருப்பவனே!, வைகுண்ட வாசா!, க்ருஷ்ணா!, மது என்ற அரக்கனைக் கொன்றவனே!,தாமரைக் க்ண்ணனே!, பிரம்மனே!, கேசி என்ற அரக்கனைக் கொன்றவனே!, துஷ்டர்களைக் களைந்து ஜனங்களைக் காப்பவரே!, வஸுதேவர் மைந்தனே!, தேவர்களின் தலைவா!, கருணையுடன் எனக்கு கைகளைத் தந்தருளுவாயாக.

ஏகேந சக்ரமபரேண கரேண ஸங்கம்
அன்யென ஸிந்து-தனயா மவலம்ப்ய திஷ்ட்டன்
வாமேதரேண வாதாபய பத்ம-சிஹ்ணம்
ஒரு கையில் சக்ரத்தையும், மறுகையில் சங்கத்தையும், இன்னொரு கையில் மஹாலக்ஷ்மியை அணைத்துக் கொண்டும், வலது கையால் வரமளித்துக் கொண்டும் இருக்கும் லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப் பெருமாளேஎனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

அந்தஸ்ய மே ஹ்ருத விவேகமஹாத நஸ்ய
சோரை:ப்ரபோ பலிபிரிந்தரிய நாமதேயை:
மோஹாந்த கூப குஹரே விநிபாதிதஸ்ய
புலன்கள் என்னும் பெயரிலிருக்கும் வலிமையான திருடர்களால், குருடாகியிருக்கும் எனது அறிவு என்னும் செல்வம் கவரப்பட்டு, மோஹம் என்னும் பாழும் கிணற்றில் தள்ளப்பட்ட எனக்கு கருணையுடன் கை கொடுத்தருள்வாய் லக்ஷ்மி நரஸிம்ஹா.

லக்ஷ்மி-ந்ருஸிம்ஹ-சரணாப்ஜ மதுவ்ரதேந
ஸ்தோத்ரம் க்ருதம் ஸுபகரம் புவி ஸங்கரேண
யே தத் படந்தி மநுஜா: ஹரிபக்தியுக்தா:
தே யாந்தி தத்பத ஸரோஜமகண்ட ரூபம்.
பூமி, நீளா சமேத ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ பரப்ரம்மணே நம:
------------லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் ஸம்பூர்ணம்--------------
Tuesday, May 5, 2009
நரஸிம்ஹ ஜெயந்தி - சிறப்புப் பதிவு-1
நாரத புராணத்தில் நரஸிம்ஹ அவதாரம் பற்றிச் சொல்கையில், நரஸிம்ஹ ஜெயந்தியன்று மாலை புண்யமான இந்த அவதாரம் பற்றி ச்ரவணம் செய்து பூஜை செய்து நமஸ்கரிப்பவர்களுக்கு அனைத்துப் பாபங்களும் விலகி நன்மை உண்டாகும் என்றும் மனோ தைரியமும்,தெளிவான ஞானமும், விரோதிகளிடத்து வெற்றியும் கிட்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாமும் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை இந்த புண்ய தினத்தில் பூஜித்து நல்லன எல்லாம் வேண்டிடலாம். போன வருஷ நரஸிம்ம ஜெயந்திக்கு ருண விமோசன ஸ்தோத்ரத்தினை இங்கே பதிந்தேன். இன்று ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பொருளுடன் பார்க்கலாமா?. [எனக்குத் தெரிந்த அளவில் பொருள் சொல்லியிருக்கிறேன். சில-பல இடங்களில் கொஞ்சம் நெருடலாக இருந்தது, படிப்பவர்கள் ஏதேனும் தவறு கண்டு திருத்தினால் மகிழ்வேன்]

ஸ்ரீமத் பயோநிதி நிகேதந சக்ரபாணே!
போகீந்த்ர போக-மணி ரஞ்சித புண்ய மூர்த்தே!
யோகீச! சாச்வத! சரண்யே!பவாப்தி போத!
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்

ஸங்கட்டிதாங்க்ரி கமலாமல காந்தி காந்த!
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்.

ஸம்ஸாரமென்னும் காட்டுத்தீயால் எரிக்கப்பட்டு அல்லல் படுபவனும், பயம் ஏற்படுத்தும் பரந்த தீயினால் கருகிய ரோமங்களை உடையவனும், உம்முடைய பாதத் தாமரை என்னும் நீர்த்தேக்கத்தை வேண்டியிருப்பவனான எனக்கு, லக்ஷ்மி நரஸிம்ஹனே!, நீ கை கொடுத்தருள வேண்டும்.

ஸம்ஸாரம் என்னும் வலையில் வீழ்ந்தவனும், தூண்டிலால் இழுக்கப்பட்ட மீன்போல பொருளாசையால் ஈர்க்கப்பட்ட புலன்களை உடையவனும், துண்டிக்கப்பட்ட தாடைகளையுடைய தலையைக் கொண்டவனுமாகிய எனக்கு, லக்ஷ்மி நரஸிம்ஹனே!, நீயே எனக்கு கை தந்தருள வேண்டும்.
ஸம்ஸார கூப மதிகோர மகாதா மூலம்
ஸம்ப்ராப்ய துக்க சத ஸர்ப்ப ஸமாகுலஸ்ய
தீநஸ்ய தேவ க்ருபணா பதமாக தஸ்ய
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்
ஸம்ஸார பீகர-கரீந்த்ர-காபிகாத-
நிஷ்பிஷ்ட மர்ம வபுஷ்: ஸகலார்த்தி நாச!
ப்ராண-ப்ரயாண-பவபீதி ஸ்மாகுலஸ்ய
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்
ஸம்ஸார ஸர்ப்ப கந-வக்த்ர-ப யோக்ர-தீவ்ர
தம்ஷட்ரா-கரால-விஷதக்த விநஷ்ட-மூர்த்தே!
நாகாரி வாஹன! ஸுதாப்தி நிவாஸ! செளரே!
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்
லக்ஷ்மியுடனிருக்கும் நரஸிம்ஹ பெருமாளே!,கருடனை வாஹனமாகக் கொண்டவனே, அமுதத்தைக் கொண்ட பார்க்கடலில் வசிப்பவனே!, வஸுதேவரின் புதல்வனே!, வாழ்க்கை என்னும் பாம்பின்வாயிலிருக்கும் கொடும் பற்களின் நஞ்சால் பொசுக்கப்பட்டு உருவிழந்த எனக்கு கை கொடுத்தருள வேண்டும்.
ஸம்ஸார வ்ருக்ஷ மகபீஜ மநந்த கர்ம
சாகா சதம் கரண பத்ர மநங்க புஷ்பம்
ஆருஹ்ய து:க்க பலிநம் பததோ தயாளோ!
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
பாவங்களை விதையாகவும், அளவற்ற செய்கைகளை எண்ணற்ற கிளைகளாகவும், புலன்களை இலைகளாகவும், ஆசையை மலர்களாகவும், துயரங்களை பழங்களாகவும் கொண்ட வாழ்க்கை என்னும் மரத்தின் மீது ஏறி, கீழே விழும் நிலையில் இருக்கிறேன். இரக்கமுடையவனே!, லக்ஷ்மி நரஸிம்ஹனே!, நீ எனக்கு கை தந்தருள வேண்டும்.
------------------ அடுத்த பதிவில் (நாளை) முடிவுறும்-------------------------
Sunday, May 3, 2009
ஸ்ரீ பிரம்மேந்திரர் ஜெயந்தி : ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர ஸ்தவம்....

ஸ்ரீ சதாசிவர் அப்போதைய காஞ்சி ஆசார்யாரான (57ஆம் ஆசார்யார்) பரமசிவர்-II என்பவரிடம் தீக்ஷை பெற்றவர். ஸதாசிவ பிரம்மேந்திரர் கைவல்யம் அடைந்து சுமார் 120 வருடங்கள் கழித்து நடந்த நிகழ்ச்சி இது. அப்போது சிருங்கேரியில் ஆசார்யராக இருந்தவர் ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள். அவருக்கு ப்ரம்ம ஞானத்தில் ஏதோ சந்தேகம் எழுந்ததாம். அப்போது அதைப் பற்றி கலந்து உரையாடித் தெளிய யாரும் இல்லாத நிலையிருந்ததாம். அதாவது ப்ரம்ஹ ஞானத்தை அடைந்தவர், உணர்ந்தவர் மட்டுமே தெளிவிக்க முடியும் என்பதால் அவ்வாறான ஒருவரைத் தேடியபோது, ஸ்ரீசதாசிவர் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறார். தமது விஜய யாத்திரையில் தென் பகுதிக்கு வரும் போது சதாசிவ பிரம்மேந்திரரது அதிஷ்டானத்தை அடைந்து பிரார்த்தனை செய்ய முடிவு செய்கிறார்.
சிருங்கேரி மடத்தின் கிளை ஒன்று கரூர் அருகில் இருக்கும் மஹாதானபுரம் என்னும் கிராமத்தில் இருக்கிறது. அங்கு வந்த ஸ்ரீ ஆசார்யர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானத்திற்கு பல்லக்கில் போகிறார். போகும் பல்லக்கு மிகவும் நிதானமாகச் செல்வதாக உணர்ந்து போகிகளிடம் காரணம் கேட்கிறார். போகிகள் தாம் பல்லக்குடன் முன்னே செல்கையில் தம்மை யாரோ பின்புரம் தள்ளுவதாக உணர்வதால் எதிர்த்துச் செல்வது சிரமாக, அதிக நேரம் பிடிப்பதாகச் சொல்கின்றனர். தமது திருஷ்டியில் இது பிரம்மேந்திரரைப் பார்க்கச் செல்லும் முறையல்லஎன்று உணர்ந்து, பல்லக்கிலிருந்து இறங்கி தமது கை நீட்டி அது நீளூம் வரையில் நடந்து, பிறகு ஒரு நமஸ்காரம் செய்து பின்னர் இன்னொரு கை தூரம் நடந்து மீண்டும் நமஸ்காரம் செய்வதுமாகச் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து நெரூரை அடைந்தாராம்.
நெரூரை அடைந்த ஆசார்யார் தமது அனுஷ்டானங்களைக் காவிரிக் கரையில் முடித்துக் கொண்டு பிரம்மிந்திராளது அதிஷ்டான வளாகத்தினுள் சென்று கொண்டு, வேறு யாரையும் உள்ளே விட வேண்டாம் என்றும் தாமே திரும்பி வந்து பேசும் வரையில் எந்த விதத்திலும் தன்னுடன் தொடர்பு கூடாது, எல்லோரும் திருமதிலுக்கு வெளியிலேயே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார். அன்ன ஆகாரமின்றி, யாரிடமும் ஏதும் பேசாது அதிஷ்டானத்தின் முன்பு தியானத்தில் அமர்ந்து விட்டாராம். மூன்று நாட்கள் இவ்வாறாக இருந்திருக்கிறார். காலை-மாலையில் காவேரிக் கரைக்கு வந்து ஸ்னாநாதிகளை முடித்துக் கொண்டு செல்வாராம். ஏதும் பேசுவதோ, அல்லது பிக்ஷை எடுத்துக் கொள்ளவோ இல்லையாம். பக்தர்கள் எல்லோரும் திருமதிலுக்கு வெளியே அன்ன ஆகாரமின்றி ஆசார்யாரது பிக்ஷைக்குப் பின்னரே உணவு எடுத்துக் கொள்வதாக உறுதியெடுத்து காத்திருந்தார்களாம். மூன்றாம் நாள் இரவு மதிலுக்குள்ளிருந்து இருவர் பேசிக்கொள்வது காதில் கேட்டதாம். ஒரு குரல் ஆசார்யாரது குரலாக இருப்பதை உணர்ந்தனர், இன்னொன்று சதாசிவ பிரம்மத்தினுடைதாக இருக்கலாம் என்று நினைத்து, மறுநாள் ஆசார்யார் சொல்வார் என்றும் ஆசார்யார் சதாசிவ பிரம்மத்திற்கு பூஜை செய்தால் அதன் மூலம் அவரது குருவாக சதாசிவத்தை ஏற்றது தெரியும் என்றும் முடிவு செய்து காத்திருந்தனராம்.
எதிர் பார்த்தது போலவே ஸ்ரீ ஸ்வாமிகள் மறுநாள் வெளியில் வருகையில் ஸ்ரீ சதாசிவ பிரம்மத்தை போற்றி 45 ஸ்லோகங்களை [ஸ்ரீ சதாசிவேந்த்ர ஸ்தவம்] எழுதி எடுத்து வந்து சதாசிவ பிரம்மத்திற்குதாம் பூஜை செய்ய ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னாராம். அங்கிருந்து கிளம்பும் போது ஸ்ரீ சதாசிவ பிரம்மத்தின் படத்தை பல்லக்கில் வைத்து சிருங்கேரிக்கு எடுத்துச் சென்றதாகச் சொல்கிறார்கள். இப்போதும் சிருங்கேரி ஆசார்யர்கள் தமது தமிழக விஜயத்தில், குறிப்பாக பட்டமேற்ற பிறகு வரும் முதல் பயணத்தில் நெரூர் வந்து பூஜைகள் செய்து காணிக்கைகள் அளிப்பதைக் காணலாம்.
இவ்வாறாக பிரம்மத்தில் கலந்து 130 வருடங்கள் கழித்தும் தன்னை நோக்கி சிரத்தையுடன் வந்தவருக்கு அனுக்ரஹித்துள்ளார் சதாசிவர். மேற் சொன்ன நிகழ்ச்சியின் போது சிருங்கேரி ஆசார்யார் எழுதிய 45 ஸ்லோகங்களில் சிலவற்றை சொல்லி நாமும் அந்த பரபிரம்மத்தை வணங்குவோம்.
பரமசிவேந்த்ர கராம்புஜ ஸம்பூதாய ப்ரணம்ர வரதாய
பததூத பங்கஜாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய.
பரமசிவேந்திரர் என்னும் மஹானின் கரகமலத்தால் உண்டானவரும், [இங்கு சொல்லப்பட்டிருக்கும் பரமசிவேந்திரர் காமகோடி பீடத்து யதி, சதாசிவருக்கு ஸன்யாசம் அளித்தவர்]நமஸ்கரித்தவர்களுக்குப் பரதத்துவத்தை அருளுபவரும், கால்களில் தாமரையை ஜெய்த்தவருமான ஸ்ரீ சதாசிவேந்த்ரரை நமஸ்காரம் செய்கிறோம்.
கரமாஹி த்விஜ பதயே சமதம முக திவ்ய ரத்னவாரிதயே
சமனாய மோஹ விததே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய
காமம் என்னும் பாம்புகளுக்கு கருடனாக இருப்பவரும், சமம், தமம் போன்ற உத்தம ரத்னங்களிருக்கும் சமுத்ரமுமான ஸ்ரீ சதாசிவேந்த்ரரை மோக சமூகம் அடங்குவதற்காக நமஸ்காரம் செய்கிறோம்.
ப்ரணதாய யதி வரேண்யைர் கண நதாப்ய ஹார்ய விக்ன ஹ்ருதே
குணதா ஸீக்ருத ஜகதே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய
யதிச்ரேஷ்டர்களால் நமஸ்கரிக்கப்படுபவரும், விக்னேஸ்வரராலும் போக்க முடியாத விக்னங்களைப் போக்குபவரும், குணங்களால் உலகத்தையே தாஸபாவமடையச் செய்தவருமான ஸ்ரீ சதாசிவேந்த்ரரை நமஸ்காரம் செய்கிறோம்.
ந சாஹமதி சாதுரீ ரசித சப்த ஸங்கைள் ஸ்துதிம்
விதாது மபிச க்ஷமோ நச ஜபாதி கேப்யஸ்திமே
பலம் பலவதாம் வர ப்ரகுரு ஹேது சூன்யாம் விபோ
ஸதாசிவ க்ருபாம் மயி ப்ரவர யோகினாம் ஸத்வரம்
மிகச் சாதுர்யம் நிரம்பிய சப்தங்களால் ஸ்துதி செய்யும் சாமர்த்யம் எனக்கில்லை. ஜபம் முதலியவை செய்வதற்கும் பலமில்லை. பலம் உள்ளவர்களில் சிரேஷ்டரான ஸ்ரீ சதாசிவரே!சமர்த்தரே!, யோகிகளில் ஸ்ரேஷ்டரே!, உமது அவ்யாஜ கருணையை சீக்கிரத்தில் என்பால் செலுத்த வேண்டும்.
ஸ்தீகார்ச்சன ப்ரீத ஹ்ருதம்புஜாய பாகாப்ஜ சூடா பரரூப தர்த்தே
சோகாப ஹர்த்ரே தரஸாநதானாம்பாகாய புண்யஸ்ய நமோயதீசே
கொஞ்சம் பூஜித்தாலேயே சந்தோஷமடையும் மனமுடையவரும், சந்திரனை தலையில் பூஷணமாக அணிந்தவரான பரமசிவனின் மற்றொரு ரூபமானவரும், நமஸ்கரித்தவர்களுக்குவிரைவில் துக்கத்தைப் போக்குகின்றவரும், புண்யத்தின் பயனாக இருப்பவருமான ஸ்ரீ சதாசிவேந்த்ர யதீஸ்வரருக்கு நமஸ்காரம் செய்கிறோம்.
நாளை சதாசிவ பிரம்மேந்திரர் ஜெயந்தி. இந்த புண்ய தினத்தில் நாமும் ஸ்ரீ சதாசிவேந்த்ரரை வணங்கி அத்வைதானுபவம் வேண்டுவோம்.
Friday, May 1, 2009
அனானியின் சிந்தனைக்கு/பின்னூட்டத்திற்கு எனது கண்டனங்கள்..

நமது வழிபாட்டு முறைகளும், சமயமும், சாஸ்திரமும் இப்படி எசலிக் கொள்ளவா சொல்லியிருக்கிறது?. அவரவருக்கு அவரவர் குரு, தெய்வம் உயர்ந்தது, அவற்றைப் பற்றி அவரவர்தமது கருத்தை,அதன் உயர்வைச் சொல்லுவதில் என்ன தவறு?. எந்த யதியானாலும் வணங்கு என்று சொல்லியிருக்கும் சாஸ்திரத்தை, அதை செயல்படுத்திக் காட்டிய பரமாசாரியாரைவேறு இதில் நுழைத்து, கடவுளே! ஏன் இந்த வெறி?. எதைச் சாதிக்க இப்படி ஒரு பின்னூட்டம்?
அனானி சொல்லியிருக்கும் சாஸ்திரங்களை ராமானுஜர் மதிக்காதோ அல்லது அவற்றை அவர் பின்பற்றாதோ இருக்கவில்லையே?. அவரது வாழ்க்கையில் பல்வேறு காலங்களில் அவர் சாஸ்திரத்திற்கும் சம்பிரதாயத்திற்கும் குடுத்த உயர்வு அழுத்தமாக அவரது வரலாற்றில் பதிவாகியிருக்கிறதே?. அனானி தம்மை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் முறை அத்வைதத்தையோ, வைதீகத்தையோ தூக்கி நிறுத்தும் முயற்சி என்றால் இவ்வாறான பிற ஆசார்யர்களை பகவத்பாதரோ அல்லது பரமாசாரியரோ எங்காவது பழிக்கச் சொல்லியிருக்கிறார்களா என்பதையும் அந்த அனானி நினைத்துப் பார்க்கட்டும். அத்வைத ஸ்தாபகராகட்டும், அதன் வழிவந்த ஆசார்யார்களாகட்டும் குலாசாரத்தைக் கடைபிடியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்களே, அதையெல்லாம் செய்யத் துவங்கினால் இந்த த்வேஷமே வரக்கூடாதே?, இடுகையில் இருக்கும் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு அந்த ஆசார்யரை வணங்கிவிட்டு அல்லவா சென்றிருப்போம்?