
நாராயணம் பத்மபுவம் வஸிஷ்டம் சக்திம் ச தத்புத்ர பராசரம் ச வியாஸம் சுகம் கெளடபாதம் மஹாந்தம் கோவிந்த யோகீந்த்ரம் அதாஸ்ய சிஷ்யம் ஸ்ரீசங்கராசார்யம் அதாஸ்ய பத்மபாதம் ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம் தம் தோடகம் வார்த்திககாரம் அந்யாந் அஸ்மத்குரூந் ஸந்ததம் ஆனதோஸ்மி.
அதாவது, ஸ்ரீமந் நாராயணனிடமிருந்து பிதா-புத்ரர் என்ற ரீதியில் வந்த பரம்பரை, சுகாசாரியாருக்குப் பின்னர் ஸந்யாஸ பரம்பரையாக மாறியிருக்கிறது. இதனாலேயே கெளட பாதரிலிருந்து ஆரம்பிக்கும் குரு பரம்பரையை 'மாணவ ஸம்ப்ரதாயம்' என்று கூறுவர். இந்த மாணவ ஸம்ப்ரதாயத்தில் முதல் ஆசார்யார்கெளடபாதர். இவர் ஸ்ரீசங்கரரின் பரம குரு.
'கெளடபாதர் சிவந்த மேனி கொண்டவர். அவர் தமது இடக்கையில் கவிழ்த்த வெண்தாமரை மொட்டுப் போன்று தோன்றும் கமண்டலத்தையும், வலக்கையில் கருவண்டுகள் போன்ற ருத்ராக்ஷத்தால் ஆன ஜப மாலையையும் வைத்திருக்கிறார். வலக்கை கட்டவிரலால் ருத்ராக்ஷத்தை உருட்டிக் கொண்டிருப்பது கருவண்டுகள் அவரது கர-கமலத்தை சூழ்ந்து கொண்டிருப்பது போல தோன்றுகிறது' என்று கூறித் துதித்து வணங்கினாராம்.
ஈச்வரனது அவதாரம் என்று போற்றப்படுமளவுக்கு தபஸ் ஸித்தி பெற்றவர் ஸ்ரீசங்கரர். அவரது குருவான கோவிந்த பகவத்பாதருக்கு குரு கெளட பாதர். இருவரும் ஞானத்தில் பரிபூரணமானவர்கள். இருப்பினும், குரு-சிஷ்ய பாவத்தில், கெளட பாதர் சங்கரரிடம், 'காமம் போன்ற விரோதிகளைக் களைந்தீர்களா?, சாதனா சந்துஷ்டியை உணர்ந்தீர்களா?, அஷ்டாங்க யோக சித்தி பெற்றீர்களா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார். அதற்கு சங்கரர், மிக விநயமாக, குரு-சிஷ்ய உரையாடல் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக, 'வியாஸமுனியின் புதல்வரான சுகாசாரியரிடம் உபதேசம் பெற்ற உங்களது பாத தரிசனம் எனக்குக் கிடைத்ததே பெரிய பாக்யம். உங்களை ஒரு முறை தரிசித்தாலேயே ஊமை பேசவும், மூடன் அறிவாளியாகவும், பாபி தனது பாபங்கள் கழுவப்பெற்று தூயவனாகவும் ஆகிடுவர். அகவே எனக்கு இன்று உங்கள் தரிசனத்தின் மூலம் நீங்கள் கேட்ட எல்லாவற்றையும் சிறிது காலத்தில் அடைந்திடுவேன் என்பது திண்ணம்' என்று கூறி மீண்டும் வணங்குகிறார்.
இதன் பொருள், 'கலியுகம் மட்டுமல்லாது மற்ற மூன்று யுகங்களிலும் அவதாரம் செய்த பாக்யத்தை இன்று உங்கள் தரிசனத்தால் பெற்றேன். இதை விடச் சிறந்ததாக நான் அடையவேண்டியது ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் வேண்டுவது ஒன்று உண்டு, என் சித்தம் எப்போதும் பிரம்ஹத்திலேயே நிலைத்திருக்க அனுக்ரஹிக்க வேண்டும். கெளட பாதரும் 'அப்படியே ஆகட்டும்' என்று அருள்கிறார்.
இந்த நூலில் பகவத்பாதரை ஸ்ரீஸூரேஸ்வரர் பின்வருமாறு வந்தனம் செய்கிறார்.
ஸ்ரீமத் சங்கரபாதபத்ம யுகளம் ஸம்ஸேவ்ய லப்த்வா உசிவாந்
ஞானம் பாரஹம்ஸ்யம் ஏதத் அமலம் ஸ்வாந்த அந்தகாராபனுத்
மா பூத் அத்ர விரோதினீ மதி: அத: ஸ்த்பி: பரீக்ஷ்யம் புதை:
ஸர்வத்ர ஏவ விசுத்தயே மதம் இதம் ஸந்த: பரம் காரணம்.
"ஸ்ரீமத் சங்கர பகவத் பாதரின் பாதயுகளத்தை நன்கு சேவித்து இந்த நிர்மலமான அத்வைத ஞானத்தை அடைந்தேன். இது பரமஹம்ஸ ஸந்யாசிகளாலேயே அடையத்தக்கது. உள்ளத்தில் இருக்கும் அக்ஞானம் என்னும் காரிருளைப்போக்க வல்லது. முமுக்ஷுக்களாகவும், பரிசுத்தமான மதியை உடையவர்களாகவும் இருக்கும் பண்டிதர்கள் இந்த நூலைப் படித்து இதன் குணதோஷங்களைச் சொல்லட்டும். இது க்யாதியை அடைவதற்காக எழுதப்பட்டதல்ல. யாருக்கும் இதனால் என்னிடம் விரோத-பாவம் ஏற்பட வேண்டாம்" என்று கூறுகிறார்.
இரண்டாவது ஸ்லோகத்தில் பின்வருமாறு குருவந்தனம் செய்கிறார்.
விஷ்ணோ: பாதாநுகாம் யாம் நிகிலபவநுதம்
சங்கரோ அவாப யோகாத்
ஸர்வக்ஞம் ப்ரஹ்மஸம்ஸ்தம் முனிகண ஸஹிதம்
ஸம்யக் அப்யர்ச்ய பக்தயா
வித்யாம் கங்காம் இவ அஹம் ப்ரவரகுண நிதே:
ப்ராப்ய வேதாந்த தீப்தாம்
காருண்யாத்தாம் அவோசம் ஜனிம்ருதி
நிவஹ த்வஸ்தயே துக்கிதேப்ய:
வியாசராக வந்த மஹாவிஷ்ணுவிடமிருந்து பெருகிய அத்வைத ஞானமாகிய கங்கையை எம் குருநாதரான ஸ்ரீசங்கரர் தமது யோக பலத்தால் தன்னிடம் பெற்று வைத்துக் கொண்டார். அவர் ப்ரஹ்ம நிஷ்டர். சர்வஞர். சிஷ்யர்களும், முனிகணர்களும்எப்போதும் அவரைச் சூழ்ந்து இருப்பர். நான் பகீரதனைப் போல இருந்து, அவரை பரம-பக்தியுடன் பூஜித்து ஞான கங்கையை அடைந்தேன். அந்த ஞான-கங்கையின் ப்ரவாஹத்தை இந்த கிரந்தத்தின் மூலமாக ஸம்ஸாரமாகிய இருட்டில் உழலும் ஜீவர்களை முமுக்ஷுக்களாக ஆக்கி கடைத்தேற்றட்டும்' என்று பிரார்த்திக்கிறார்.
இவ்வாறாக நாமும் ஸ்ரீ பகவத்பாதரை போற்றி வணங்கிடுவோம், அவரருளால் அஞ்யானத்திலிருந்து விடுபட வேண்டுவோம்.
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!