
யத்ர கேய ரதஸ் தத்ர கிரிசக்ர ரதோத்தம'
ஞாலம் நின்புகழேமிக வேண்டுந்தென் ஆலவாயில் உறையும் என் ஆதியே!
சங்கரரின் தாயார் ஆர்யாம்பாளின் இறுதிக்காலம் நெருங்கும் சமயத்தில், ஆதிசங்கரர் தான் முன்னர் வாக்கு கொடுத்ததுபடி தாயருகில் இருக்கிறார். தனது தாயின் வேண்டுகோளுக்கிணங்க, சிவனைத் துதித்து தனது தாயின் அந்திம காலம் சிரமமின்றி இருக்க வேண்டுகிறார். இவரது துதியினை கேட்டு ஈசன் சிவகணங்களை அனுப்பினாராம். அந்த சிவகணங்களின் உருவம் கண்டு அஞ்சிய ஆர்யாம்பாள், சங்கரரிடம், தனக்கு பயமாக இருக்கிறதென்றும் இந்த கணங்களுடன் தான் கைலாசம் போக மாட்டேன் என்றும் சொல்கிறார். உடனே ஆச்சார்யார் விஷ்ணுவைத் துதிக்கிறார். அந்த துதியில் நாராயணனை பாதாதி-கேசம் வர்ணிப்பதாக அமைத்து 15 பாடல்கள் பாடுகிறார். அந்த சமயத்தில் வைகுந்த வாசனின் தூதர்கள் வந்து ஆர்யாம்பாளின் ஜீவனை கூட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த 15 பாடல்கள் விஷ்ணு பாதாதி-கேச ஸ்துதி என்று கூறப்படுகிறது. இதன் முடிவில் "என்னாலே சொல்லப்பட்ட இந்த ஸ்துதியால் யார்-யார் மஹா விஷ்ணுவின் அழகை அனுபவிக்கிறார்களோ அப்படிப்பட்ட விஷ்ணு பக்தர்களின் நிர்மலமான திருவடிகளை எப்போதும் நான் நமஸ்காரம் செய்கிறேன்" என்ற் சொல்லி முடிக்கிறார். இப்போது சொல்லுங்க ஆதிசங்கரரும் அடியார்க்கு அடியார் தானே?
மதுரையின் ஆட்சி ஆறு மாதங்கள் அன்னையாலும், ஆறு மாதங்கள் அப்பனாலும் செய்யப்படுவதாக ஐதிகம். அன்னைக்கு முடி சூடுதல் எட்டாம் நாள் திருநாள். இன்று அன்னை பாண்டியனுக்கு உரிய வேப்பம் பூ மாலை அணிந்து மலையத்வஜ பாண்டிய ராஜ கன்னியாக பட்டாபிஷேகம். (இது போன்றே ஈசன் பாண்டிய ராஜனாக பட்டம் சூட்டிக்கொள்வது ஆவணி மூல உற்சவத்தில் நடக்கும்.)