Monday, December 3, 2007

ஹரிவராசனம்




ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே


மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், பிரபஞ்சத்தையே தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்னும் குதிரையில் (ஹரித: என்றால் சூரியன், அவனது தேரில் உள்ள ஏழு குதிரைகளின் பெயர் ஹரிதம்)
பவனி வரும் சூரியனால் ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும், நித்ய நர்த்தனம் புரிபவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணகோஷத்தால் மகிழ்பவரும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்காக நடனமாடுபவரும், உதிக்கும் சூரியனொத்த ஒளிமயமானவரும், பூத நாயகனுமாகிய ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

உலகின் உண்மைப் பொருளாகவும், உலக உயிர்களுக்கு நாயகனாகவும்
தன்னை சரணடைந்தவர்க்கு எல்லாவளமும் அளிப்பவரும், ஓங்கார மந்த்ரமாய் இருப்பவரும், இசையில் ப்ரியம்/நாட்டம் உடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

குதிரை வானரும், அழகிய முகமுடையவரும், கதாயுதம் ஏந்தியவரும்,
தேவர்களால் வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல ப்ரியம் உள்ளவரும், கீர்த்தனங்களில் ப்ரியமுடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

மூன்றுலகிலும் அர்ச்சிக்கப்படுபவரும், எல்லா தெய்வங்களின் அம்சமாக விளங்குபவரும், மூன்று கண்களை உடையவரும், சிறந்த குருவாக விளங்குபவரும், வேண்டுவதை அளிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சம்சார பயத்தை போக்குபவரும், பக்தருக்கருள்வதில் தந்தை போலும், உலகத்தை தன் மாயையால் மயக்குபவரும், விபூதி தரித்தவரும், வெள்ளை யானையை வாகனமாக கொண்டவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

மதுரமான, மிருதுவான புன்முறுவல் உடையவரும், சுந்தர முகமுடையவரும், இளமையும், மென்மையும் உடையவரும், மயங்க வைக்கும் உடலமைப்புக் கொண்டவரும், யானை, சிங்கம், குதிரை போன்ற்வற்றை வாகனமாக கொண்ட
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணடைந்தவர்களிடத்து அன்புடையவரும், நினைத்ததை உடனே அளிப்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், ஸாதுக்களிடத்து
வசிப்பவரும், வேதகோஷங்களில் மகிழ்பவரும், கீதங்களில் லயிப்பவருமான
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாடலைக் கேட்க இங்கே சுட்டவும் (பதிவர் திரு. சதங்காவிற்கு நன்றி.)

21 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

சரணம் ஐய்யப்பா ஸ்வாமி சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா ஸ்வாமி சரணம் ஐய்யப்பா

தி. ரா. ச.(T.R.C.) said...
This comment has been removed by a blog administrator.
Kannabiran, Ravi Shankar (KRS) said...

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

ஊஞ்சலில் ஆடிக் கொண்டே பாடுவது போல், அப்படி ஒரு நடை, நளினமான யேசுதாசின் குரலில்!
பதிவர் சதங்காவுக்கும் நன்றி!

தக்க நேரத்தில் தக்க பதிவு மெளலி அண்ணா!
ஹரிவராசனம் எழுதியது யார்?

//ப்ரியமுடைய ஸ்த்யகாவின் கணவரும்//
விளக்கம் ப்ளீஸ்!

Anonymous said...

// ப்ரியமுடைய ஸ்த்யகாவின் கணவரும் //

அண்ணா,
திரிச்சூர்,ஆழபுழா,சம்ரவட்டம் போன்ற பகுதிகளில் ஐயப்பர் க்ருகஸ்தராக ஆராதிக்கபடுகிறார்.பிரபா தேவி மனைவியாகவும்,ஸத்யகா என்பவர் மகனாகவும் ஆராதிக்கபடுகிறார்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

//க்ருகஸ்தராக ஆராதிக்கபடுகிறார்.பிரபா தேவி மனைவியாகவும்,ஸத்யகா என்பவர் மகனாகவும் ஆராதிக்கபடுகிறார்கள்//

ஆகா! இதென்ன புதுக்கதை....

தம்பி,

என்/ரவியின் அடுத்த கேள்வி பிரபா தேவி யார்?. ஹிஹிஹி

நானும் சிலரிடம் கேட்டிருக்கிறேன், கன்பார்ம் ஆன உடன் பதிவினை திருத்திவிடுகிறேன்.

Geetha Sambasivam said...

இந்தப் பதிவுக்கு சத்யகா பத்தி மதுரையம்பதி தான் வந்து சொல்லணும்னு நான் கொடுத்த பின்னூட்டம் எங்கே போச்சு? :((((((((

மெளலி (மதுரையம்பதி) said...

//இந்தப் பதிவுக்கு சத்யகா பத்தி மதுரையம்பதி தான் வந்து சொல்லணும்னு நான் கொடுத்த பின்னூட்டம் எங்கே போச்சு?//

தெரியல்லையே?, இந்த பின்னூட்டம்தான் வந்தது.

குமரன் (Kumaran) said...

மிக நன்றாகப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள் மௌலி

Anonymous said...

//ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
//
இவ்விடத்தில் உலகத்தின் உண்மை பொருளே என்றுதான் பொருள்படும்.

//ப்ராணநாயகம்// அது தனி வார்த்தை.

மெளலி (மதுரையம்பதி) said...

//இவ்விடத்தில் உலகத்தின் உண்மை பொருளே என்றுதான் பொருள்படும்.

//ப்ராணநாயகம்// அது தனி வார்த்தை.//

தம்பியாரே, இதைத்தான் நானும் போனில் சொன்னேன் (இப்படி இருக்கலாமோ என்று). மேலே சொன்னது போல பொருள் கொண்டால் அடுத்த வார்த்தைக்கு (ப்ரணநாயகம்) அர்த்தம் எப்படி சொல்வது?....யாருக்கு ப்ராண நாயகன்?.

Anonymous said...

//ப்ராணநாயகம்//

ப்ராணநாயகம் என்பதை உயிர்கள் அனைத்திற்கும் நாயகனே! என்று பொருள் கொள்ள வேண்டும்.இதற்கு ஆகுபெயர் என்று பெயர்.உதாரணமாக//உலகம் சிரித்தது// இதில் உலகம் என்பது உலகில் உள்ள மக்களை குறிக்கும்

மெளலி (மதுரையம்பதி) said...

தம்பி,

உங்கள் வாதத்தை ஏற்கிறேன்.

வேறு யாரும் ஏதும் சொல்ல வருகிறார்களா பார்க்கலாம்.

குமரன் (Kumaran) said...

தம்பி சார் விளக்கம் சரியாகத் தோன்றுகிறது. நானும் அப்படித் தான் இது வரை பொருள் கொண்டிருந்தேன்.

cheena (சீனா) said...

ஆன்மீக விளக்கங்கள் அளிப்பதற்கென்றே இருக்கும் அனைவரும் சேர்ந்து பின்னூட்டமிட்டு பலப்பல செய்திகள் அளிப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது

Geetha Sambasivam said...

இன்று படித்த சில புத்தகங்களில், ஐயப்பனுக்குத் திருமணம் இல்லை எனவும், சாஸ்தாவின் மனைவியர் பூரணை, புஷ்கலை எனவும் சத்யகா என்னும் பையன் உண்டு எனவும் படிச்சேன். சத்யகா பத்தி வேறு தகவல்கள் கிடைக்கவில்லை. பூதநாத உபாக்கியானம் கிடைச்சால் பார்க்கலாம்.

மெளலி (மதுரையம்பதி) said...

அன்பர்களே,

அன்புத்தம்பி (அம்பிக்கு மட்டும்தானா என்ன எனக்கும்தான்) சொன்ன பொருள் சரியாக இருப்பதால், பதிவில் அவ்வாறே மாற்றிவிட்டேன். மேலும், லிட்டரலாக, மினிங் கொடுத்தமைக்கு மன்னிக்கவும்.

கேள்வி கேட்ட கே.ஆர்.எஸ் மற்றும் திருத்திய தம்பி, மற்றும் கே.ஆர்.எஸ், கீதாம்மாவுக்கு நன்றிகள் பல.

Parthiban (Alias Lord of Universe) said...

அனைவருக்கும் அன்பான வணக்கம், நான் எனது வலைப்பகுதியை இங்குள்ள அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி,
தமிழ் ஐயப்பன் பஜனை பாடல்கள் இப்போது எனது பக்கங்களில்,

"HTTP://WWW.KURUVIGANG.BLOGSPOT.COM"

Sathish said...









Anonymous said...

சரணம் ஐய்யப்பா ஸ்வாமி சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா ஸ்வாமி சரணம் ஐய்யப்பா

Unknown said...

மிகவும் தெளிவாகவும் அழகாகவும் அர்த்தங்களை கொடுத்தமைக்கு நன்றி

Unknown said...

மிகவும் தெளிவாகவும் அழகாகவும் அர்த்தங்களை கொடுத்தமைக்கு நன்றி