
Tuesday, December 25, 2007
பரசுராம ஜெயந்தி....

Friday, December 21, 2007
மார்கழி நீராட்டு....

Wednesday, December 12, 2007
பாவை நோன்பு....


[அன்னை பராசக்தி, காத்யாயன மகரிஷியின் மகளாக பிறந்தாளாம், அப்போது அவளது பெயர் காத்யாயினி. (இதுவே பின்னர் திரிந்து காத்தாயி என்றானதோ?) திருவிழிமிழலை கோவில் அம்பிகை பெயர் காத்யாயினி. அன்னையின் 51 பீடங்களில் இவள் ஒட்டியாண பீடத்திற்கு உரியவளாக சொல்லப்படுவள்]
பாவை நோன்பை பற்றி திருப்பாவையில் நிறைய குறிப்புக்கள் காணக் கிடைக்கிறது. நோன்பிற்கு உரிய செயல்களை "கிரிசைகள்" (கிரியைகள்) என்கிறார் கோதை. நோன்பிற்கான உறுதியாக சில கிரியைகள் ஏற்றுக் கொண்டும், சில கிரியைகளை விடுத்தும் செயல்படுவதாக சங்கல்பம் செய்கிறார். பாவை நோன்பிருக்கையில் கோதை விலக்கியவையாக குறிப்பிடுவது இரண்டாம் பாடலில் வருகிறது.பால், நெய் உண்ணுதல், கண்களுக்கு அஞ்சனமிடுதல், மலரலங்காரம் செய்துகொள்ளல், மற்றும் பிறருக்கு தீமை செய்யாதிருத்தல், சூரிய உதயத்திற்கு முன் நீராடுதல், தான-தருமம் செய்தல் என்று எப்போதும் கடைபிடிக்க வேண்டிய சில நன்நெறிகளையும் சேர்த்து சங்கல்பித்துக் கொள்கிறாள்.
ஆயிற்று நோன்பிற்கான சங்கல்பம், இனி சிரத்தையுடன் தொடர வேண்டுமே?. உடனேயே நோன்பின் பயனை கூறி எல்லோருக்கும் சிரத்தையினை வரவழைக்கிறார் மூன்றாம் பாடலில். என்ன பலனாம்?, நாடெங்கும் தீங்கு இன்றி இருக்கும், மாதம் மும்மாரி பொழியும், செந்நெல் சிறப்பாக விளையும், பசுக்கள் நிரம்பப் பால் கறக்கும், எங்கும் செல்வம் நிறையும் என்று மக்களின் ஜீவாதாரத்திற்கு வேண்டியவற்றை பலனாக கூறி உற்சாகப்படுத்துகிறாள். பின்னர் இருபதாம் பாடலில் நோன்பு முடிக்க வேண்டி பொருட்களான விசிறி, கண்ணாடி போன்றவற்றை பெரிய பிராட்டியிடம் கேட்கிறார். மேலும் இருபத்தாறாவது பாடலில் நோன்பு முடிப்பதை கொண்டாட வெண்சங்கம், பறைகள், மங்கள விளக்கு, கொடி, விதானம் எனப்படும் மேல் கூறை விரிப்பு ஆகியவற்றை கேட்கிறார். பின்னர் 27ஆம் பாடலில் நோன்பின் சன்மானமாக சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, பாடகம் போன்ற பலவிதமான நகையலங்காரங்களும் புத்தாடைகளும் அணிந்து அக்காரவடிசல் எனப்படும் பால்சோறு உண்பார்களாம். அதுவும் எப்படி?, அந்த அக்காரவடிசல் தெரியாதவாறு நெய் மூ(டி)ழ்கியிருக்க, அதனை உண்கையில் அந்த நெய் முழங்கை வரை வழிய உண்பார்களாம். ஆக பாவை நோன்பினை எப்படி கொண்ட வேண்டுமென பாடி, கொண்டாடி காட்டியிருக்கிறாள் கோதை.
இவை தவிர பழங்காலத்தில் பெண்கள் கணவனின் ஆயுள் விருத்திக்காக பல நோன்புகள் நடத்தியிருக்கிறார்கள். அவற்றில் குறிப்பாக மார்கழி, தை, மாசி மாதங்களில் நடந்த நோன்புகளாவன; நித்திய சிருங்கார நோன்பு, பொம்மை நோன்பு, அட்லத்தி நோன்பு (தெலுங்கு பேசும் மக்கள் இன்றும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்), சிட்டிப் பொட்டு நோன்பு போன்றவை.
Tuesday, December 11, 2007
மார்கழியின் மகிமை...


Monday, December 10, 2007
மார்கழி திங்களல்லவா.....
பாவை நோன்பிருந்தாளாமே கோதை?...அதென்ன பாவை நோன்பு?
ஆமாம், இரண்டு பாவைகளிலும் இணையான கருத்துகள் என்று ஏதேனும் இருக்கா?
25 முக்தி நிலை / ஜோதியில் கலத்தல்.
பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் மரணத்தை தழுவியே ஆக வேண்டும். இதனை தடுக்க முடியாது. ஆனால் மறுபடி பிறவி ஏற்படாமல் தடுப்பது நம் கையில்தான் இருக்கிறது. முக்தி, பிரம்மத்துடன் இணைவது, ஜோதியில் கலப்பது என்றெல்லாம் சொல்வது நடக்க வேண்டுமானால் இறந்தால்தான் முடியுமா?. உயிருடன் இருக்கும் போதே பிரும்ம ஞானியாக முடியும், அதனையே வள்ளலார் பெருமான் மரணமில்லா பெருவாழ்வு என்கிறார். இதனைத்தான் "பிறவாமை" என்று காரைக்கால் அம்மையாரும், பட்டினத்தாரும் சொல்லியிருக்கிறார்கள். சங்கரர், ரமணர் போன்ற பல முனி ஸ்ரேஷ்டர்களும் இதனைக் விளக்க முற்பட்டுள்ளனர்.
எனக்கு நல்லதோரு தந்தையாக மட்டுமல்லாது, பிரம்மோபதேசம் செய்வித்து குருவாகவும், குப்தமாக ஸ்ரீவித்யா பற்றிச் சொல்லிக் கொடுத்து ஆசானாகவும் என்னை வழிந்டத்தி வ்ந்த என் தந்தை ஸ்ரீ வி.ஆர். கணபதி, இன்று மதியம் 2 மணி அள்வில் ஸ்ரீபுரம் அடைந்தார். அன்னை மீனாக்ஷி அவரது ஆத்மா சாந்தி அடைய அனுகிரக்கட்டும்.
Monday, December 3, 2007
ஹரிவராசனம்

ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணடைந்தவர்களிடத்து அன்புடையவரும், நினைத்ததை உடனே அளிப்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், ஸாதுக்களிடத்து
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.
பாடலைக் கேட்க இங்கே சுட்டவும் (பதிவர் திரு. சதங்காவிற்கு நன்றி.)