யத்ர கேய ரதஸ் தத்ர கிரிசக்ர ரதோத்தம'
Saturday, April 26, 2008
அன்னையின் ரதங்கள்........
யத்ர கேய ரதஸ் தத்ர கிரிசக்ர ரதோத்தம'
Wednesday, April 23, 2008
ஆதிசங்கரரும் அடியார்க்கு அடியார்தான்...
சங்கரரின் தாயார் ஆர்யாம்பாளின் இறுதிக்காலம் நெருங்கும் சமயத்தில், ஆதிசங்கரர் தான் முன்னர் வாக்கு கொடுத்ததுபடி தாயருகில் இருக்கிறார். தனது தாயின் வேண்டுகோளுக்கிணங்க, சிவனைத் துதித்து தனது தாயின் அந்திம காலம் சிரமமின்றி இருக்க வேண்டுகிறார். இவரது துதியினை கேட்டு ஈசன் சிவகணங்களை அனுப்பினாராம். அந்த சிவகணங்களின் உருவம் கண்டு அஞ்சிய ஆர்யாம்பாள், சங்கரரிடம், தனக்கு பயமாக இருக்கிறதென்றும் இந்த கணங்களுடன் தான் கைலாசம் போக மாட்டேன் என்றும் சொல்கிறார். உடனே ஆச்சார்யார் விஷ்ணுவைத் துதிக்கிறார். அந்த துதியில் நாராயணனை பாதாதி-கேசம் வர்ணிப்பதாக அமைத்து 15 பாடல்கள் பாடுகிறார். அந்த சமயத்தில் வைகுந்த வாசனின் தூதர்கள் வந்து ஆர்யாம்பாளின் ஜீவனை கூட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த 15 பாடல்கள் விஷ்ணு பாதாதி-கேச ஸ்துதி என்று கூறப்படுகிறது. இதன் முடிவில் "என்னாலே சொல்லப்பட்ட இந்த ஸ்துதியால் யார்-யார் மஹா விஷ்ணுவின் அழகை அனுபவிக்கிறார்களோ அப்படிப்பட்ட விஷ்ணு பக்தர்களின் நிர்மலமான திருவடிகளை எப்போதும் நான் நமஸ்காரம் செய்கிறேன்" என்ற் சொல்லி முடிக்கிறார். இப்போது சொல்லுங்க ஆதிசங்கரரும் அடியார்க்கு அடியார் தானே?
Thursday, April 17, 2008
திக்விஜயம், திருக்கல்யாணம், திருத்தேர், சப்தாவரணம், தேவேந்திர பூஜை....
மீனாக்ஷி கல்யாண வைபோகமே, சுந்தரேஸ்வர கல்யாண வைபோகமே.... பத்தாம் நாள் காலை கல்யாணம். மதுரை மாநகர ஆத்திக அன்பர்கள் எல்லோரும் தமது இல்லத்துப் பெண்ணுக்கே திருமணம் நடந்தது போல மகிழ்வுடன் இருக்கும் நாள். கோவிலுக்கு வரும் எல்லா பக்தர்களுக்கும் தாலிச்சரடு, மஞ்சள் கிழங்கு, குங்குமம் பிரசாதமாக அளிக்கப்படும். மாலை 5 மணிவரை கல்யாணக் கோலத்தில் காட்சி அளிப்பர். கோவில் இன்று மட்டும் மதியம் மூடப்பட மாட்டாது. மாலையில் அன்னைக்கு புஷ்பப் பல்லாக்கு, ஈசன் பிரியாவிடையுடன் யானை வாகனத்தில் பவனி.
சித்திரை திருவிழாவின் கடைசி நாள், பன்னிரண்டாம் நாள். காலையில் அம்மை-அப்பர் வைகையாற்றில் எழுந்தருளி தீர்த்தவாரி. மாலையில் தேவேந்திரனுக்கு (முதன் முதலில் தேவேந்திரனால் ஏற்படுத்தப்பட்டதே பிரம்மோற்சவம்) ரிஷப வாகனத்தில் காட்சி அளிப்பதுடன் மீனாக்ஷி கோவில் சித்திரை உற்சவம் முடிவுக்கு வருகிறது.
சப்தாவரணத்தன்று (11ஆம் நாள் மாலை) அழகருக்கு எதிர்சேவை ஆரம்பித்துவிடும். அது பற்றி தனியாக பிறகு பதிவிடலாம்.
Wednesday, April 16, 2008
பத்ம பாதரும் நரசிம்மரும்....
Tuesday, April 15, 2008
ஐந்து, ஆறு, ஏழு, மற்றும் எட்டாம் நாள் உற்சவங்கள்...
ஏழாம் நாளில் அன்னை யாழி வாகனத்திலும் அப்பன் நந்திகேஸ்வர வாகனத்திலும்.
மதுரையின் ஆட்சி ஆறு மாதங்கள் அன்னையாலும், ஆறு மாதங்கள் அப்பனாலும் செய்யப்படுவதாக ஐதிகம். அன்னைக்கு முடி சூடுதல் எட்டாம் நாள் திருநாள். இன்று அன்னை பாண்டியனுக்கு உரிய வேப்பம் பூ மாலை அணிந்து மலையத்வஜ பாண்டிய ராஜ கன்னியாக பட்டாபிஷேகம். (இது போன்றே ஈசன் பாண்டிய ராஜனாக பட்டம் சூட்டிக்கொள்வது ஆவணி மூல உற்சவத்தில் நடக்கும்.)
Monday, April 14, 2008
ராமோ விக்ரஹவான் தர்ம:
இந்த பூமியில் வாழும் மனிதன் அதர்மச் செயல்களை விலக்கி, தர்மச் செயல்கள் மட்டுமே செய்து நல்லவனாக, வல்லவனாக வாழ முடியும் என்பதை தானே வாழ்ந்து காட்டிய அவதாரமே ராமாவதாரம்.தார்மீக வாழ்வில் மனிதனுக்கு ஆசை கூடாது, எதை செய்ய வேண்டுமோ, அல்லது எதை செய்ய தனக்கு ஆணையிடப்பட்டிருக்கிறதோ அதனை தயங்காது செய்ய வேண்டும். பிறருக்கு தானம் செய்வதை தலையாயதாகக் கொள்ள வேண்டும். இந்த குணங்கள் எல்லாம் ராமனிடத்தில் தலைதாழ்ந்து வெட்க்கப்படும் அளவிற்கு சிறந்தவன். இதுமட்டுமா, பித்ருதேவோ பவ: என்பதற்கேற்ப, தந்தையின் விருப்பத்தை தயக்கமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று 14 வருடங்கள் வனவாசம் புரிந்து கடமையுணர்ச்சியுடைய புத்ரனாக, (பித்ரு வாக்ய பரிபாலனனாக) வாழ்ந்து காட்டியுள்ளார். இதனால்தான் பெரியவர்கள், இராமர் செய்ததை செய்யவேணும், கிருஷ்ணர் கூறியதை செய்யவேணும் என்று சொல்கிறார்கள்.
ஒரு சமயம், அஷ்டமி-நவமி திதிகள் பகவானிடம் சென்று, 'விவாஹம், க்ருஹப்ரவேசம், பிரயாணம் போன்றவைகளுக்கு அஷ்டமி-நவமி கூடாது என்று எல்லா மங்கள காரியங்களிலும் தங்களை அனைவரும் பஹிஷ்கரிப்பதாக முறையிட்டனர். திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்பதாக பகவானும், ' நீங்கள் கவலைப்பட வேண்டாம், உங்களையும் உலகமே கொண்டாடும்படியான நிலை வரும் என்று அனுக்ரஹித்து அனுப்புகிறார். இதன் காரணமாகவே அஷ்டமியில் க்ருஷ்ணராகவும், நவமியில் ராமனாகவும் அவதரித்து அந்த திதிகளுக்கு சிறப்பினை ஈந்தார். ஆகவேதான் புனர்வசு நக்ஷத்திரத்தில் பிறந்தாலும் நாம் சைத்ர மாத, சுக்லபஷ நவமியினை ராம நவமியாக கொண்டாடுகிறோம். இந்த நாளில், நடுப்பகலில், கடகலக்னத்தில் 5 கிரகங்கள் உச்சமாக இருக்கும் நேரத்தில், அயோத்தியில் இராமர் அவதரித்ததார். இந்த திருநாளை உலகம் முழுதும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகின்றனர். ராம நவமிக்கு முன்பான ஒன்பது நாட்களை கர்ம்போத்ஸவம் என்றும், ராம நவமிக்கு பின்வரும் ஒன்பது நாட்களை ஜனனோத்ஸவம் என்றும் கொண்டாடுகின்றோம். ந்த 18 நாட்களில் ராமாயண பாராயணம், உபன்யாசம் போன்றவை மிகச் சிறப்பாக செய்வர். இன்றைய தினம் ராம ஜனனம் படித்தல் மிகவும் சிலாக்கியம்.
இணையத்திலும் திருமதி வல்லியம்மா அருளச் செய்த சித்ர ராமாயணம் இருக்கிறது, திருமதி கீதாம்மா நடத்தும் ப்ரவசனமொத்த இராமாயண காதைகள் இருக்கிறது. இவற்றை மீண்டும் ஒருமுறை படித்து இராமனருள் வேண்டுவோம்.
Friday, April 11, 2008
இரண்டாம், மூன்றாம், நான்காம் நாள் திருவிழா நிகழ்ச்சிகள்...
Thursday, April 10, 2008
இந்தாங்க அழைப்பிதழ், மதுரைக்கு போகலாம் வாங்க
அன்னை மீனாக்ஷி-சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வருடத்தின் 12 மாதங்களிலும் (10 நாள்) உற்சவங்கள் உண்டு. இந்த உற்சவங்களில் முதன்மையானதும் , தமிழகம் முழுவதும் அறிந்ததுமான சித்திரைத் திருவிழாவிற்கான இந்த வருட அழைப்பிதழ் இங்கே!!!