மாம் அங்கே நாத நிதாய ஸர்வ ஸீகர :
முக்தே ரூபாயஸ்த்வயா, மாலா கேய சமர்ப்பணம்
மம முநேத் துக்தம் தமே வாதுனா ஜாதாஹம்
புவி தர்சயாமி க்ருபயா த்வம் தேஹ்யனுக்ஞாமிதி.
பூமாதேவி ஆண்டாளாக அவதரித்ததை சொல்லுகிறது மேற்கண்ட சுலோகம். பூமாதேவி பொறுமையுடன் அளவில்லா கருணையும் கொண்டவள். அவள் ஒரு சமயம் தன் பதியான ஸ்ரீமன் நாராணனிடம் "உலகில் ஏன் சிலரைக் கஷ்டப்படச் செய்கிறீர்கள்?,சிலரை ஏன் சுகப்படச் செய்கிறீர்கள்" என்று கேட்டாள்.
"எனக்கு எல்லோரும் ஒன்றுதான், அவரவர் பாவ-புண்ணியத்தின்படி கஷ்டமோ-சுகமோஅனுபவிக்கிறார்கள்" என்றார் நாராயணன்.
"அது எப்படி?"
"நேர்வழியில் போனால் சுகமாக, சுலபமாக போய்ச் சேரலாம். குறுக்கு வழியில் போய் கல்லும்,முள்ளும் குத்தி அவஸ்தையய் வரவேற்றால் அதற்கு யார் பொறுப்பு?" "அவர்கள் நேர்வழி செல்லும்படி எப்படிச் செய்வது?"
இப்போது தாயார்,"நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான ஒரு பக்தனை சொல்லுங்களேன், கலியில் ஹரி பக்தியின் சிறப்பைபார்க்கலாம்" என்றாள்.
இதற்கு பதிலாக பெருமாள் பின்வரும் லின்க்கினை பூமாதேவிக்குக் கொடுத்து படிக்கச் சொன்னார். http://madhavipanthal.blogspot.com/2006/11/blog-post_30.html
அந்தப் பதிவினைப் படித்த பூமாதேவி, "புரிந்தது ஸ்வாமி, பாசுரத்தைப் பாடியவனும், அதனை ஒருதடவைகேட்ட பிரம்மராக்ஷஸும் நற்கதி அடைந்ததுதானே இதன் சாரம்" என்றாள்.
"ஆமாம்; நான் ஜீவராசிகளுக்கு இதைவிட சுலபமான வழி என்ன காட்ட முடியும். இதைப் போலவே ஒருபுஷ்பத்தை எடுத்து எனக்கு அர்ப்பணம் செய்தாலும் நான் திருப்தி அடைந்து நற்கதி அளிப்பேன். அதைக்கூட செய்யாமலிருந்தால் நான் என்ன செய்ய?"
பூமாதேவி ஏதோ யோசிக்கத் தொடங்கினாள்
பகவான் அவளைப் பார்த்து, "என்ன தீவிர யோசனை?", என்க,
"ஒன்றுமில்லை ஸ்வாமி, எனக்கொரு ஆசை. அதை நிறைவேற்ற அருள் புரிய வேண்டும்"
"என்னம்மா அந்த ஆசை"
"ஸ்வாமி, நான் ஒரு தடவை பூமியில் பிறந்து பாமாலையினாலும், பூமாலையினாலும் தங்களை அர்ச்சித்து, உலகிற்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டுமென்பதே எனது ஆசை" என்று கூறினாள் பூமாதேவி.
பகவானும் "அப்படியே ஆகட்டும், நான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் வடபத்ர சாயியாக அர்ச்சையிலிருப்பேன்.அப்போது கருடாழ்வார் விஷ்ணுசித்தராக அவதரித்து திருத்துழாய் கைங்கர்யம் செய்வார். அவரது திருக்குமாரியாக அவரது திருத்துழாய் தோட்டத்தில் நீ தோன்றி பாமாலையும், பூமாலையும் சூட்டலாம்" என்று கூறினார்.
அதன்படி ஆடிமாதம், சுக்லபக்ஷ சதுர்த்தியும், பூர நக்ஷத்திரமும் கூடிய செவ்வாய்க் கிழமையன்று, பெரியாழ்வார்திருத்துழாய் பறிக்கும் நந்தவனத்தில் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்தாள்.
இன்று ஆடிப்பூரம். அன்னை பூமாதேவி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாக அவதரித்த தினம்.